பங்குசந்தை- ஒரு சூதாட்டம்
அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பட்டிதொட்டிஎங்கும் பேசப்படும் விசயமாக மாறி விட்டது. பொதுவாக வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் வரா கடன் என்றாலும், நிதி நிறுவனக்களின் வீழ்ச்சிக்கு காரணம் பங்களில் அவர்களின் முதலீடு தான் என்பது தெரிந்த விஷயம். அவர்களின் நட்டத்தில் அமெரிக்கா பங்கெடுத்து கொள்கிறது என்பது தெரிந்து விஷயம் தான். ஆனால் தெரியாத விஷயம் அவர்கள் நட்டப்பட்ட பணம் எங்கே சென்றது.
வியாபாரம் என்பதின் பொதுவான விதி. வாங்குபவர் ஒருத்தர் விற்பவர் ஒருத்தர், ஒருவருக்கு லாபம் என்றால் ஒருவருக்கு நஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே?
அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நிதி நிறுவனக்கள் எத்தனையோ லட்சம் பேர்களை தற்கொலைக்கு தூண்டின என்று தெரியுமா, அதை சொல்வதற்கு முன் பங்கு சந்தைகளை பற்றி சில முன்னுரையும் தேவை. ஏற்கனவே பங்கு சந்தையை பற்றி அறிந்தவர்கள் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டி காட்டலாம்.
பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தமது வளர்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு அவர்களையும் பங்குதாரர்களாக மற்ற பங்குகளை வெளியிடுகிறது, உதாரணமாக ஒரு நிறுவனத்தின் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்து கொள்வோம், அதில் பாதியை பங்குகளாக வெளியிடுகிறார்கள், மீதி ஐந்தாயிரத்தை ஒரு பங்கின் மதிப்பு ஐம்பது வீதம் நூறு பேர் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.
அதாவது அவர்கள் பங்கு ஒன்றின் விலை ஐம்பது என்று தீர்மானித்திருப்பார்கள். ஆனால் பங்கு வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் அதனில் சூதாட்டம் ஆரம்பித்து விடுகிறது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டு அவர்கள் அதை வெளியீட்டு விலையை விட அதிக விலைக்கு கேட்பார்கள். சரி இது நம்பிக்கையின் அடிப்படையில் தானே இங்கெ சூதாட்டம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா,
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள், அந்த நிறுவனம் இன்னும் ஆரம்பிக்கவே படவில்லை என்பது தான் உண்மை, அந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிடும் போதே அது 2011-ல் தான் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியே ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் ரிலையன்ஸ் பவர் என்னும் குறியீடு வெறும் சூதாட்டத்திற்காக பயன்பட்டது.
வெளிநாடுகளை சேர்ந்த நிதி நிறுவனக்கள் லாபம் பார்க்க வேறொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி மாயை தோற்றத்தில் அந்த பங்குகளை விலை உயர செய்து பின் உயர்ந்த விலையில் விற்க தொடங்குவார்கள். அதிக விலையில்,வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மொத்த முதலையும் இழந்து நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான். இவைகளுக்கு காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான் என்று தெரிந்தும் அதனை மாற்ற நமது அரசாங்கம் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஒரு நிறுவனத்தின் வளச்சியை பொறுத்து அதன் பங்குகளின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். வளரலாம் என்ற மாயை தோற்றத்தில் விலையுயர்ந்த பங்குகள், இன்று அந்த விலைகளை மீண்டும் தொடுமா என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!
பின்னாளில் விலைபொருள்கள்(கமாடிடி) பற்றியும் எழுதுகிறேன்
Comments
Post a Comment